For Daily Alerts
Just In
வங்கிகளில் ரூ. 2,317 கோடி எல்ஐசி நிறுவனம் முதலீடு
பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 1,037 கோடி அளிக்கிறது. யூனியன் வங்கிக்கு ரூ. 650 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ. 302 கோடியும், யுனைடெட் வங்கிக்கு ரூ. 148 கோடியும் அளிக்கிறது. இத்தகவலை மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தொகைக்கு ஈடாக நான்கு வங்கிகளும் விருப்ப ஒதுக்கீட்டு பங்குகளை அளிக்கும்.
இந்த நிதியுதவி கிடைத்ததன் மூலம் இந்த வங்கிகளின் கடன் வழங்கும் அளவு அதிகரிக்கும். அத்துடன் மூலதன அளவும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உயரும் என்று நம்பப்படுகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மத்திய அரசு ரூ. 1,440 கோடியை நிதியை அளிக்கிறது. இத்தகவலை மும்பை பங்குச் சந்தைக்கு ஐஓபி தெரிவித்துள்ளது. அரசுத் துறை வங்கிகளின் நிதி நிலையை வலுவாக்கும் முயற்சியாக மத்திய அரசு இத்தொகையை முதலீடுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
The state-owned Life Insurance Corporation (LIC) has pumped in Rs 2,137 crore in four public sector banks through the preference share route.
Story first published: Sunday, April 1, 2012, 10:21 [IST]