நாளை கருணாநிதி தலைமையில் திமுக கண்டன பொதுக்கூட்டம்!
தமிழ்நாடு முழுவதும் முக்கிய ஊர்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன.
எந்தெந்த ஊர்களில் யார்? யார்? பேசுகிறார்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுகிறார்.
தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமை தாங்குகிறார். துரைமுருகன் உள்பட பலர் பேசுகிறார்கள்.
வாலாஜாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பேசுகிறார்.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மதுரையில் நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
கனிமொழி
திருவொற்றியூரில் கனிமொழி எம்.பி. பேசுகிறார்.
தஞ்சையில் எஸ்.பி. சற்குணபாண்டியன், திருச்சியில் கோவை ராமநாதன், திருவள்ளூரில் பொன்முடி, தாம்பரத்தில் எ.வ. வேலு, நெல்லையில் கம்பம் செல்வேந்திரன், சென்னை மாதவரத்தில் நடிகர் வாகை சந்திரசேகர், செங்கல்பட்டில் நடிகர் குமரிமுத்து, தூத்துக் குடியில் முன்னாள் அமைச் சர் ரகுபதி ஆகியோர் பேசுகிறார்கள். இதுபோல் மற்ற ஊர்களில் பேசுவோர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.