Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஆப்கன் தாக்குதல் எதிரொலி: ராணுவம் எச்சரிக்கையாக இருக்க ஏ.கே.ஆண்டனி அறிவுறுத்தல்

Posted by:
Published: Monday, April 16, 2012, 14:35 [IST]

 Attacks Afghanistan Antony Asks Forces To Be Vigilant Aid0216

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தொடர்தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி அறிவுறுத்தியுள்ளார்.

ராணுவ தளபதிகளுடனான 3 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட ஆண்டனி இதனைத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

தலிபான்கள் தாக்குதல்கள் நடைபெற்றாலும்கூட அந்நாட்டுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் ஆண்டனி கூறியுள்ளார்.

ராணுவ தலைமை தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையே பல்வேறு பஞ்சாயத்துகள் ஏற்பட்டிருந்த நிலையில் இம்மாநாடு தற்போது நடைபெறுகிறது.

மேலும் இந்திய ராணுவம் பலவீனமாக இருப்பதாக வெளியான செய்திகள் பற்றியும் அந்தோணி கூட்டியுள்ள இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ள்தாகத் தெரிகிறது.

English summary
Noting that the situation in Afghanistan-Pakistan region continues to be a cause of concern, defence minister A K Antony on Monday asked the armed forces to be more vigilant citing Sunday's attacks in Kabul.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs