மாநில அரசே நாளிதழையும் சேனலையும் நடத்தும்: மமதா அதிரடி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அரசு சார்பில் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
"மக்கள் நலத் திட்டங்களை அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக சொந்தமாக தொலைக்காட்சி மற்றும் நாளிதழை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது" என்று மமதா பானர்ஜி
அண்மையில் ஊடகங்களை கடுமையாக போட்டுத் தாக்கியிருந்தார் மமதா பானர்ஜி. ஊடகங்கள் பரபரப்புக்காகவே செய்திகளை வெளியிடுவதாகவும் அரசின் நலத் திட்டங்களை அவை வெளிப்படுத்தவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் டிவி மற்றும் நாளிதழை நடத்தப்போவதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
ஆனால் மமதாவின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கிண்டல் செய்துள்ளது. ஏழைகளுக்கு எந்த ஒரு நலத்திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்கள் பணத்தை அவர் வீணடித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.