டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் 11,500 நோயாளிகள் மரணம்
மும்பையைச் சேர்ந்த அஜய் மராதே என்பவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்று கேட்டு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு வந்த பதிலில் தான் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 11,500 பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
2008-2009ம் ஆண்டில் 4,100 பேரும், அதற்கு அடுத்த ஆண்டில் 4,159 பேரும், 2010-2011ம் ஆண்டில் 4,177 பேரும் இறந்துள்ளனர். மேலும் 9 பேர் மருத்துவமனையில் உள்ள ஆர் பி சென்டரில் இறந்துள்ளனர்.
இத்தனை பேர் இறந்தும் அவர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய மருத்துவமனை எடுக்கவில்லை. ஒரு மனிதனின் உடலில் இருந்து 8 உறுப்புகளை தானம் செய்யலாம். உடல் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வராதது துரதிர்ஷ்டவசமானது என்று மராதே தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸின் மருத்துவமனை நிர்வாகத் துறை பேராசிரியர் டாக்டர் எஸ் சத்பதி கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 11,566 பேர் இறந்துள்ளனர். இதுதவிர 960 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.