முண்டந்துறையில் வவ்வால்கள் ஆராய்ச்சி முகாம்!
திருநெல்வேலி : முண்டந்துறை வனச்சரகத்தில் வவ்வால்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வன உயிரின பாதுகாவலர் ராஜேஷ் வசீஸ்ட் தலைமை வகித்தார். லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிஸ்லட், நிக்கி தாமஸ் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய சாராள்தக்கர் கல்லூரி உயிரியல் துறை தலைவர் ஜூலியட் வனிதாராணி, 45 இனங்களை கொண்ட வவ்வால்களில் 39 வகை பூச்சிகளை உண்பவை. மீதமுள்ள 6 வகை வவ்வால்கள் மட்டுமே பழங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்பவை. மரங்களை அரிக்கும் பூச்சிகளை வவ்வால்கள் சாப்பிடுவதால் வனத்துறையில் உள்ள மரங்கள் காப்பாற்றப்படுகின்றன என்றார்.
நெலலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக முன்னாள் பதிவாளர் மணிக்குமார் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த வவ்வால் ஆராய்ச்சியாளர்கள் வவ்வால்கள் பற்றி எப்படி ஆராய்ச்சி செய்வது என்று பயிற்சியளித்தனர்.