For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதுமான மாணவர் சேர்க்கை இல்லை: ஆந்திராவில் 55 கல்லூரிகளை மூட அனுமதி

By Mathi
Google Oneindia Tamil News

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் 40 தொழிற்கல்லூரிகளை மூடடுவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக கவுன்சிலான ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளதாக அதன் இயக்குநர் மற்றும் மண்டல அதிகாரியான ஏ.கே. கங்கால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

ஆந்திர மாநிலத்தில் இருந்து 55 தொழிற்கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கோரி எங்களுக்குக் கடிதங்கள் வந்துள்ளன. இதில் 24 எம்.சி.ஏ., 14 எம்.பி.ஏ. கல்லூரிகள், 5 பொறியியல், 5 பார்மசி மற்றும் 3 தொழில்நுட்ப வளாகங்கள் அடங்கும். இந்த கல்லூரிகளின் வேண்டுகோளை ஏற்று 15 நாட்களுக்குள் அவற்றை மூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கல்லூரிகளுமே போதுமான மாணவர் சேர்க்கை இல்லை என்ற காரணத்தையே தங்களது கல்லூரிகளை மூடுவதற்கான காரணமாக தெரிவித்துள்ளன.

ஆந்திர மாநிலத்தில் மட்டும் 940 எம்.பி.ஏ. கல்லூரிகள், 636 எம்.சி.ஏ. கல்லூரிகள் உள்ளன. எம்.சி.ஏ.வைப் பொறுத்தவரையில் மொத்தம் 31,181 இடங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் முதல் கட்டமாக கடந்த 9443 இடங்கள் மட்டுமே பூர்த்தியாகின. 21,738 இடங்கள் காலியாகவே இருந்தன.

எம்.பி.ஏ.வைப் பொறுத்தவரையில் 62,860 இடங்களுக்கு 23141 இடங்களே பூர்த்தியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
About 40 MCA and MBA colleges in the state (Andhra Pradesh) have got approval from the All India Council for Technical Education (AICTE) to close down their institutions from coming academic year as their courses have few takers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X