For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோல்வி பயத்தால் புதுக்கோட்டையைப் புறக்கணிக்கும் திமுக - பாஜக குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Pon Radhakrishnan
மதுரை: தேர்தல் தோல்வி பயத்தால்தான் புதுக்கோட்டை தேர்தலை தி.மு.க. புறக்கணித்துள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார் .

மதுரையில் மே 10, 11-ந் தேதி நடைபெறும் மாநில மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாஜக மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மீனாட்சி யாத்திரை, மதுரையில் மே 9-ந் தேதி நடைபெறும்.

கடந்த முறை தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அக்கட்சிதான் தொடர்ந்து வெற்றி பெற்றது. அதை பெரிய சாதனையாக, அக்கட்சித் தலைவர் கருணாநிதி தம்பட்டம் அடித்துக் கொண்டார்.

ஆனால், தற்போது இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெறுவதை, அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், தேர்தல் ஆணையத்தை அவர் குற்றம்சாட்டுகிறார். இடைத்தேர்தலில் அவருக்கு ஒரு நியாயம். மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா ?

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கிடைத்த தோல்வி அவரை பெரிதும் பாதித்துவிட்டது. அந்த தோல்வி தொடர்வதை அவர் விரும்பவில்லை. தேர்தல் தோல்வி பயமே, புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க. புறக்கணிக்க காரணம் என்றார் அவர்.

English summary
BJP state President Pon. RadhaKrishnan said that due to the fear of defeat the DMK to boycott the Pudukottai By Poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X