உல்லாசத்துக்காக 17 வயது சிறுவனை கடத்திச் சென்ற பெண்ணுக்கு வலை
திருவட்டார்: சென்னையில் 17 வயது மாணவனை ஆசிரியை ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த முதலார்ஓடவிளையைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி விஜி. பக்கத்து வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுவன் ஒருவன் கட்டிட வேலைக்கு சென்று வந்தான்.
ரவி இல்லாத நேரத்தில் சிறுவனை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதை விஜி வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இதனை ரவி அவ்வப்போது கண்டித்தும் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் விஜி நேற்று முன்தினம் அனைவரும் தூங்கிய பிறகு பக்கத்து வீட்டு சிறுவனோடு எஸ்கேப் ஆகிவிட்டார். வீட்டில் இருந்த 6 பவுன்நகை மற்றும் ரூ. 5,000 பணத்தை களவாடிக் கொண்டு சிறுவனுடன் கம்பி நீட்டியிருக்கிறார்.
இது குறித்து விஜியின் கணவர் ரவியும் சிறுவனின் தந்தையும் திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
சிறுவனின் தந்தை கொடுத்த புகாரில், உல்லாசமாக இருப்பதற்காகவே தமது மகனை விஜி கடத்திச் சென்றுவிட்டார் என்று கூறியிருக்கிறார். சிறுவனை ஒரு பெண் கடத்திச் சென்ற சம்பவம் திருவட்டார் வட்டாரத்தில் பரபரப்பான விஷயமாகப் பேசப்படுகிறது.