For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது மக்களை மிரட்டிய திமுக நிர்வாகி கைது: வெளிநாட்டு துப்பாகி பறிமுதல்

By Siva
Google Oneindia Tamil News

நெல்லை: முன்னாள் திமுக தொண்டரணி அமைப்பாளர் ரோகினி நாராயணனின் வெளிநாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முன்னாள் திமுக தொண்டரணி அமைப்பாளர் ரோகினி நாராயணன். அவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி வந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதையடுத்து மக்கள் இது குறித்து புகார் கொடுத்தனர்.

அவர்களின் புகாரின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர். அப்போது அவர் தனது வீடு உள்ள பகுதியில் மாநகாட்சிக்கு சொந்தமான 1,500 அடி நிலத்தை ஆக்கிரமித்திருந்தது தெரிய வந்தது. மேலும் வழக்கமாக பயன்படுத்தப்படும் முக்கால இஞ்ச் பைப்புக்குப் பதில் 3 இன்ஞ் பைப்பை வைத்து அவர் குடிநீர் எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் ரோகினி நாராயணனை கைது செய்தனர். நேற்று கன்னியாகுமரியில் உள்ள அவரது ஹோட்டலுக்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் அங்கிருந்த ஜெர்மன் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Police have arrested Rohini Narayanan, a DMK functionary and confiscated his pistol as he threatened the people with that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X