For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்தேகப்பட்டு கேள்வி கேட்ட மனைவியை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்!

Google Oneindia Tamil News

ராமந்தபுரம்: நடத்தையில் சந்தேகப்பட்டு கேள்வி கேட்ட மனைவியை தலையில் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் ஆட்டோ டிரைவர். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் காளீஸ்வரன். இவரது மனைவி புஷ்பவல்லி. 28 வயதான புஷ்பவல்லிக்கு காளீஸ்வரனின் நடத்தை குறித்து சந்தேகம் வந்துள்ளது. வேறு எந்தப் பெண்ணுடனாவது தொடர்பு இருக்குமோ என்று அவருக்கு கவலை வந்துள்ளது.

இதனால் அடிக்கடி அவருடன் சண்டை பிடித்து வந்தார். அவரது தொடர் கேள்விகளாலும், அடிக்கடி சண்டை பிடித்ததாலும் பெரும் கோபமடைந்தார் காளீஸ்வரன்.

இந்த நிலையில் வழக்கம் போல சம்பவ தினத்தன்றும் மோதல் மூண்டது. அப்போது வீட்டில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மனைவி தலையில் ஓங்கி அடித்துள்ளார். அதில் புஷ்பவல்லி பரிதாபமாக இறந்து போனார்.

தனது மகளை அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மருமகன் காளீஸ்வரன் குறித்துப் போலீஸில் புகார் கொடுத்தார் புஷ்பவல்லியின் தந்தை. இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் காளீஸ்வரனைத் தேடி வருகிறார்கள்.

English summary
An auto driver killed his wife after she confronted him in suspect of his conduct in Ramanathapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X