ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஆசே மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது.
பூமிக்கு அடிய்ல் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி 11.34 மணிக்கு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.


















