
ஈரோடு: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டினால் தமிழகம் அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் கேவி.ராமலிங்கம் தெரிவித்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கே.வி. ராமலிங்கம் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு மற்றும் சிறுவாணி விவகாரத்தில் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி நதிநீர் தீர்ப்பாணையத்தின் இறுதி உத்தரவை மீறி சிறுவாணி ஆற்றில் எந்த நீர்ப்பாசன திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று கேரளாவுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.
அதையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சித்தால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றார் அவர்.










