
டெல்லி: பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நமக்கு அதிர்ச்சியான செய்திதான் வரப்போகிறது. எதிர்வரும் மழைக்காலத்தில் எதிர்பார்த்தபடியான மழைப்பொழிவு இருக்காதே என்று கூரப்படுகிறது.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான மழைப்பொழிவுதான் இருக்குமாம். தற்போது ஜூன் மாதமே முடிவடைய உள்ளது. ஆனாலும் போதுமான மழை இல்லை. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 96 முதல் 98விழுக்காடு மழை பெய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயத்துக்கு பயன் கிடைக்கும் என்கிறது வானிலை ஆராய்ச்சி மைய வட்டாரங்கள்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்தினர் வெளியிட்ட அறிவிக்கையில் மழைப்பொழிவு நன்றாக இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் வழக்கம் போல வானிலை ஆய்வு மைய அறிக்கை பொய்த்தே போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்,


















