Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

'ச்சே நிம்மதியே இல்லப்பா': வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகும் நித்யானந்தா!

Posted by:
Published: Tuesday, June 26, 2012, 14:26 [IST]

 Nithy Plans Flee The Country

மதுரை: மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தன் மீதுள்ள வழக்குகளுக்கு பயந்து வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம்.

நித்யானந்தா என்றைக்கு மதுரை இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டாரோ அன்றில் இருந்து அவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஆரப்போட்டிருந்த நித்யானந்தா- ரஞ்சிதா படுக்கையறை காட்சி சிடி வழக்கு விசாரணையும் தற்போது சூடுபிடித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்கு வந்த பத்திரிக்கையாளர்களை தாக்கிய வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

கர்நாடகத்தில் நிம்மதி இல்லை என்று மதுரை வந்தால் ஒரு புறம் மக்கள் போராட்டம் மறுபுறம் போலீசாரின் ரெய்டு அது இது என்று இங்கும் ஒரே பிரச்சனையாக உள்ளது. மடத்தில் பெண்களின் கவர்ச்சி நடனம் நடப்பதாகவெல்லாம் புகார் எழுந்துள்ளது. இத்தனை நாட்களும் இந்த பிரச்சனைகளை எல்லாம் கண்டும், காணாதது போல் பூஜை, அன்னதானம் என்று இருந்த நித்யானந்தா இனியும் இங்கிருந்தால் ஏதாவது ஒரு வழக்கில் சிறையில் தள்ளிவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.

இதையடுத்து இந்தியாவில் இருந்தால் தானே இந்த பிரச்சனை எல்லாம் அதனால் வெளிநாட்டுக்கு சென்றுவிடலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார். பாரீஸ் மற்றும் ஸ்பெயின் செல்ல விசா கோரி விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையே அவரது பாஸ்போர்ட்டை முடக்க கர்நாடக போலீசார் முனைப்பாக உள்ளனர். ஆனால் நித்யானந்தா 2 ஆண்டுகள் பாரீஸ் மற்றும் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று அவரது சீடர்கள் தைரியமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

English summary
Godman Nithyananda who is amidst lot of issues has decided to spend some 2 years in Paris and Spain to escape legal actions.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs