ஃபேஸ்புக்கில் புதிய பக்கத்தை தொடங்கியிருக்கிறார் அப்துல்கலாம்
சமூக வலைதளங்களில் ஒன்றான யூ டியூப்பில் ஏராளமான வீடியோ பதிவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார் 81 வயதான அப்துல்கலாம். இதைத் தொடர்ந்து தற்போது ஃபேஸ்புக்கிலும் தவறாமல் வலம் வருகிறார். 2020-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கான வழிகள் குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இத்துடன் தற்போது "www.facebook.com/kalambillionbeats" என்ற புதிய பக்கத்தையும் தொடங்கியிருக்கிறார் அப்துல்கலாம். "Billionbeats" என்பது அப்துல்கலாம் தாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற போது தொடங்கி வைத்த இ-பேப்பரின் பெயர். அதையே தற்போது தமது புதிய ஃபேஸ்புக் பக்கத்துக்கும் பெயர் வைத்திருக்கிறார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த அவரது ஆலோசகர் பொன்ராஜ் கூறுகையில், அதிமுக்கிய நிகழ்வுகளில் தமது கருத்தை ஃபேஸ்புக்கின் புதிய தளம் மூலம் கலாம் தெரிவித்து வருகிறார். அதேபோல் சாதனையாளர்களுடன் அவர்களது சாதனை முயற்சிகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோரை ஃபேஸ்புக் மூலம் ஊக்குவிக்கவும் செய்கிறார் அண்மையில் கூட மடெலெய்ன் அம்மையாருடன் புதுச்சேரியில் நிகழ்ந்த சந்திப்புகளைப் பற்றி அவர் விவரித்திருக்கிறார். அவரை அன்னை தெரசா உருவத்தில் பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுசேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் அவர் என கலாம் குறிப்பிட்டிருக்கிறார்.