Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

குடியரசுத் தலைவர் தேர்தல்: மும்பையில் பால்தாக்கரேவை சந்திக்கிறார் பிரணாப் முகர்ஜி

Posted by:
Published: Friday, July 13, 2012, 17:36 [IST]

மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி இன்று மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேவை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவிக்க உள்ளார்.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் இன்று இரவு பால்தாக்கரேவை அவரது இல்லத்தில் பிரணாப் முகர்ஜி சந்திக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தாக்கரேவுடன் சிவசேனாவின் செயல் தலைவரான உத்தவ் தாக்கரேயும் மத்திய அமைச்சர் சரத்பவார் ஆகியோரும் உடன் இருப்பர் என்று தெரிகிறது.

மும்பையில் முதல்வர் பிருத்விராஜ் சவான், துணை முதல்வர் அஜித்பவார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் பிரணாப் சந்திக்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளர் சங்மா கடந்த வாரம் மஹாராஷ்டிராவில் முகாம் போட்டு ஆதரவு திரட்டியிருந்தார்.

English summary
As part of his tour of states ahead of the Presidential poll, UPA nominee Pranab Mukherjee will meet Shiv Sena chief Bal Thackeray in Mumbai on Friday to thank him for backing his candidature.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL
IRE Vs PAK - 2nd ODI at Castle Avenue Sun 26th May ODI
ENG Vs NZ - 1st ODI at Lord's Cricket Ground Fri 31st May ODI