
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் தொடக்க விழாவின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டோக் போலிஞ்சருடன் ஆபாசமான முறையில் நடனமாடியதாக பிரபல பாடகி கேத்தி பெர்ரி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை வழக்கறிஞர் ஜெபக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.ஐபிஎல் தொடக்க விழாவின்போது கேத்தி பெர்ரியின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அவருடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிஞ்சரும் இணைந்து ஆடினார்.
அப்போது கேத்தி பெர்ரி கவர்ச்சிகரமான டிரஸ் போட்டிருந்ததாகவும், போலிஞ்சரும் அவரும் ஆடிய ஆட்டம் கவர்ச்சிகரமானதாக இருந்ததாகவும், இது அநாகரீகமான ஒன்று என்றும் வக்கீல் ஜெபக்குமார் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதேபோல நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு ஜூலை 31ம் தேதி விசாரணைக்கு வருகிறது.










