Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பாளை சிறையில் கஞ்சா பறிமுதல்: 2 சிறைக்காவலர்கள் இடமாற்றம்

Posted by:
Published: Friday, July 27, 2012, 17:14 [IST]

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கஞ்சா புழக்கத்திற்கு துணை போன 2 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஆயுள் தண்டனை கைதியான அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் தோட்ட வேலை செய்து வருகிறார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வேலைகளை முடித்துவி்ட்டு தன்னுடைய அறைக்கு சென்றபோது சிறை காவலர்கள் அவரிடம் நடத்திய சோதனையில் 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சிறைக்குள் செல்போன், கஞ்சா கடத்தலுக்கு சில சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடந்தையாக இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பாளை சிறையில் பணியாற்றிய காவலர் பீட்டர் நாங்குநேரி பாஸ்டர் பள்ளிக்கும், காவலர் சேத்தையா பிள்ளை நாகர்கோவில் மாவட்ட சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

English summary
2 policemen worked at Palayamkottai central prison were transferred after higher officials found out that these 2 helped the prisoners to get ganja from outside.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST