Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

நேபாளத்தில் மேலும் ஒரு விபத்து: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 15 இந்தியர் பலி

Posted by:
Published: Saturday, July 28, 2012, 11:44 [IST]

காத்மண்டு: நேபாள நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேபாள நாட்டில் பால்பா மாவட்டத்தில் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ருருதாம் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 9 பெண்கள், 4 குழந்தைகள், 2 ஆண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேபாளத்தில் இந்து புண்ணிய தலங்களை தரிசிக்க தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவிலிருந்துதான் அதிகம் பேர் சென்று திரும்புகின்றனர்.

கடந்த 15-ந் தேதியன்று மேற்கு நேபாளத்தில் இதேபோல் நிகழ்ந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்திருந்தனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை பேருந்து ஏற்றிச் செல்வதால்தான் இத்தகைய விபத்துகள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

English summary
As many as 15 Indian pilgrims, including four children, were killed Saturday when their jeep fell into a river in Nepal, a media report said.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter