
சென்னை: தமது ஜப்பான் பயணம் பயனுள்ளதாக இருந்ததாகவும் இந்தியாவில் ஜப்பானியர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டுக்கு கடந்த 24-ந் தேதி பயணம் மேற்கொண்ட அழகிரி இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜப்பான் நாட்டில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தேன். ரசாயன உரம், மருந்து தயாரிப்பு தொடர்பாக ஜப்பான் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. மேலும் ஜப்பான் நாட்டினர் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வமாகவும் உள்ளனர். இதுபற்றி அரசு துறை செயலாளர்கள் பேசி முடிவு இறுதி முடிவெடுப்பர் என்றார் அழகிரி.










