
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் கோக்ராஜர், சிராங் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் இன மோதல் வெடித்துள்ளது. இன மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
அசாமின் கோக்ராஜர்,சிராங் உள்ளிட்ட மாவட்டங்களில் போடோ இனத்தவருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக பெரும் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 400 கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சம் பேர் அகதிகளாக வீடுகளை இழந்து அகதிகள் முகாமில் இருக்கின்றனர்.
தற்போது மீண்டும் வன்முறை தொடரும் நிலையில் இந்த இனமோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சிராங் மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.










