
சென்னை: பிரதமர் மன்மோகன்சிங் இன்று மாலை சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் வரவேற்றினர்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இஸ்ரோவில் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்படுகின்ற நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரது சென்னை வருகையால் இன்று உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.










