விருதுநகர்: சிவகாசி முதலிபட்டியில் 39 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை அதிபர் முருகேசன் மதுரை அருகே கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே உள்ள முதலிபட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5-ந் தேதி நடந்த வெடிவிபத்தில் 39 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மன் உதயகுமார் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆலை அதிபர் முருகேசன் தலைமறைவாக இருந்து வந்தார். அவரைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை அருகே சமயநல்லூரில் கருப்பணசாமி கோவில் அருகே கைலி அணிந்து நின்று கொண்டிருந்த முருகேசனை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.










