Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

39 பேரை பலிகொண்ட சிவகாசி பட்டாசு ஆலை அதிபர் முருகேசன் கைது

Posted by:
Published: Monday, September 10, 2012, 8:49 [IST]

விருதுநகர்: சிவகாசி முதலிபட்டியில் 39 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை அதிபர் முருகேசன் மதுரை அருகே கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே உள்ள முதலிபட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5-ந் தேதி நடந்த வெடிவிபத்தில் 39 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மன் உதயகுமார் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆலை அதிபர் முருகேசன் தலைமறைவாக இருந்து வந்தார். அவரைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை அருகே சமயநல்லூரில் கருப்பணசாமி கோவில் அருகே கைலி அணிந்து நின்று கொண்டிருந்த முருகேசனை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

English summary
Police arrested the owner of the firecracker unit in Mudhalipatti near Sivakasi on Sunday, who was on the run for the past four days after the accident that killed 39 people and left more than 70 injured.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI