For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

Homage to the death of electricity
தமிழகத்தில் மின்சாரம் என்பதே கிடைப்பருமை ஆகிவிட்டது. பல ஊர்களில் மக்கள் தூங்கிய பிறகு வந்து விழிக்கு முன் ஓடிவிடும் திருடனைப் போல வந்து போகிறது மின்சாரம்.

கிட்டத்தட்ட போராட்ட மனோபாவம் செத்துப்போய், இம்சையோடு வாழப் பழகிக் கொண்டு வருகிறார்கள் மக்கள். சிலர் துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பதுபோல, இந்த மின் வெட்டு துயரை காமெடியாகப் பார்த்து வருகின்றனர்.

இந் நிலையில், 1747-ல் பிறந்த மின்சாரம் தமிழகத்தில் மட்டும் செத்துப் போனதாகவும், அதற்கு வரும் திங்கள் கிழமை காலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாகவும் இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

'உண்மையிலேயே இப்படி ஒரு போராட்டத்தை நடத்தப் போகிறார்களா.. அல்லது பேஸ்புக்கில் கமெண்ட்டுகளை வாரிக் குவிக்க மட்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்களா என்பது திங்களன்று காலைதான் தெரியவரும்'. இது இந்த அறிவிப்பைப் பார்த்ததும் பிற கட்சியினர் அடித்த கமெண்ட்!

English summary
Students Federation of India is decided to pay a homage to the death of electricity in the state on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X