For Daily Alerts
Just In
நிலம் புயலால் நாகை மாவட்டத்தில்தான் கனமழை
நாகப்பட்டினம்: வங்க் கடலில் உருவான நிலம் புயல் இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கேயும் சென்னைக்கும் இடையே நகர்ந்து வருவதால் நாகப்பட்டினம் மாவட்டம் கனமழையை சந்தித்து வருகிறது.
நிலம் புயலால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக மழைப் பொழிவை சந்தித்த மாவட்டம் நாகப்பட்டினம்தான். இந்த மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. நாகப்பட்டினம் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. த்கை மாவட்டத்தில் 21 புயல் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நாகை மாவட்ட புயல் சேத விவரங்களைத் தெரிந்து கொள்ள 1077 தொலைபேசி எண் சேவை அறிமுகப்பட்டிருக்கிறது.
நாகப்பட்டினத்தில் மழை காரணமாக 50 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Comments
English summary
The Nagapattinam districts got heavy rainfall in Tamilnadu from the Nilam cyclone.
Story first published: Wednesday, October 31, 2012, 10:18 [IST]