For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.எஸ்.பி.டாட் நெட் தேர்வு: 9 வயது தமிழக சிறுவன் சாதனை

By Mathi
Google Oneindia Tamil News

Pranav Kalyan
கலிபோர்னியா: மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP .NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12-ந் தேதி நடத்தியிருந்தது. கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத் தேர்வை எழுதுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற பாலமேட்டைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் அமெரிக்க வங்கியில் பணியாற்றி வருகிறார். பிரணவ்வின் தாயார் விசாலாட்சியும் அமெரிக்க வங்கியில் நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

பிரணவ்வின் இந்த சாதனைக்கு அவரது குடும்ப நண்பர்களான மணிவண்ணன், நதியா, சதீஷ் உள்ளிட்டோர்தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர் என்று பெருமைப்படுகின்றனர் அவரது பெற்றோர்.

English summary
Pranav Kalyan, 9 year old wonder boy studying in 4th Grade in Willow Elementary school, California, USA successfully completed MCTS exam on Jan 12, 2013. He has become the youngest kid to get the “Microsoft Certified Technology Specialist” in ASP.NET. Pranav’s father, Mr. Kalyan, hailed from Palamedu, near Madurai in Tamilnadu . He is also “Microsoft Certified Solutions Developer (MCSD)” certified Software Professional working at Bank Of America, California, USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X