
கொல்கத்தா: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்திய ராணுவம் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய கலாம், எல்லையில் ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது மிகக் கொடூரமானது. இது தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நிலைமையை ராணுவம் எதிர்கொள்ளும்.
ஏவுகணை அபிவிருத்தி என்பது அமைதியை ஏற்படுத்தக் கூடியது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீதான அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்தே ஏவுகணைப் போட்டி உருவானது.
தற்போது உலக நாடுகள் பலவும் அணு ஆயுத சோதனையை நடத்தி வருகின்றன. ஆனால் அணு ஆயுதப் போர் நடைபெற்றது இல்லை. இதனால் ஏவுகணைகள் அமைதிக்கு வழிவகுக்கக் கூடியவை என்றே நாம் சொல்லலாம் என்றார்.


















