மதுரை: சுவர் விளம்பரங்கள் தொடர்பாக மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுவதும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் செய்தது மற்றும் அதிமுகவின் விளம்பரங்களை அழித்தது ஆகிய புகார்களின் பேரில் அவரை மதுரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.
தற்போது மன்னனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















