
சிகாகோ: மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சதித் திட்டங்களில் உடந்தையாக இருந்த சிகாகோ தொழிலதிபரான தஹாவூர் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ராணா அமெரிக்காவின் சிகாகோவில் குடியேறி தொழிலதிபரானார். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான ஹெட்லியின் உதவியாளராக செயல்பட்டவன் ராணா. இதேபோல் டேனிஷ் நியூஸ்பேப்பர் தாக்குதல் எனும் சதித் திட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்தவர் ராணா.
இவன் மீதான வழக்குகள் அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கபப்ட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மும்பை தாக்குதல் குற்றவாளியான ஹெட்லி மீதான வழக்கில் வரும் 24-ந் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது










