
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து காம்பீர் நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்திய அணிக்காக 5-6 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி வரும் ஒரு வீரை பற்றிய முழுமையாக அறிந்த நிலையில் அவ்வளவு எளிதாக நீக்கிவிட முடியாது.
காம்பீரைப் பொறுத்தவரையில் கேப்டன்ஷிப்பும் பேட்டிங்கும் நன்றாகவே இருக்கும். காம்பீரைப் பொறுத்தவரை கேப்டன் டோணியின் முழு ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. ஒரு கேப்டன் தமது சக வீரர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இப்படி நீக்கக் கூடாது.
அதே நேரத்தில் இந்திய அணியில் ஹர்பஜன்சிங் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இளம் வீரர் ஷமி அகமது திறமையாக விளையாடுகிறார். ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்த டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நன்றாக விளையாட வாழ்த்துகள் என்றார்.


















