
கியூட்டோ: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரபேல் கோரெரா மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியிருக்கிறார்.
49 வயது இடதுசாரித் தலைவரான ரபேல், 56.9% வாக்குகளைப் பெற்று மக்களின் மனங்களை வென்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கில்லெர்மோ லச்சோவுக்கு 23.8% வாக்குகளே கிடைத்தன.
ரபேல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஈகுவடாரின் வறுமை 5% குறைந்துள்ளது என்கிறது ஐ.நா.வின் புள்ளி விவரக் கணக்கு. தற்போது வெற்றி பெற்றதன் மூலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு ரபேல் ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்.










