இரணைமடு: விடுதலைப் புலிகளே உருவாக்கி வெற்றிகரமாகப் பயன்படுத்தி வந்த இரணை மடு விமான தளத்தைக் கைப்பற்றிய சிங்கள ராணுவம், இப்போது அதனை மேலும் சீரமைத்து தங்கள் வசதிக்காக பயன்படுத்தி வருகிறது.
வட இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதிப் போர் வரை விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்டு வந்த விமான தளம் இரணை மடு.

இந்த தளத்தைக் கைப்பற்றிய சிங்கள ராணுவத்தினர், புணரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதேநேரம், இந்த விமானத்தளத்திற்கு தமிழர்கள் எவரும் செல்லாதவாறு தடை போட்டு வந்தனர்.
இப்போது, தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு மட்டும் அந்த விமானத்தளத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழர்கள் தடுக்கப்படுகின்றனர்.










