சென்னை: தமிழக அரசு, விரைவில் மின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்தப்படவுள்ளன.
இது மட்டுமல்லாது மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதற்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இப்போது இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.
54000 கோடி ரூபாய் நஷ்டத்தில்…
தமிழக அரசு மின்வாரியம், 54,000 கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, வருவாயை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்து, முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.

























