சென்னை: சென்னை மாநகராட்சியின் மலிவு விலை உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இங்கு மிகவும் மலிவான விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை விற்கப்படும்.
சென்னை முழுவதும் 1000 உணவகங்களை திறக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 15 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏழைத் தொழிலாளர்கள் நலனுக்காக இந்த உணவகங்களை மாநகராட்சி அமைத்துள்ளது.
இந்த உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உணவகங்கள் திறக்கபட்டன.



























