
டெல்லி: பிரதமர் பதவி மீது தமக்கு விருப்பமே இல்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ராகுல் காந்தியின் கருத்தாக சிலவற்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தமக்கு கட்சிதான் முக்கியம்..நீண்டகாலம் அரசியலில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதில்தான் தமக்கு நம்பிக்கை உண்டு.
காங்கிரஸ் கட்சியில் ‘மேலிட முடிவு' என்ற ஹை கமாண்ட் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறவர். ஆனால் அவர் தமக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.





















