
டெல்லி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் தான் மிகவும் அப்செட் ஆகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அரசு மிகவும் அப்செட்டாக உள்ளது. சிபிஐ சோதனை நடத்தப்பட்ட நேரம் பொருத்தமற்றது, தேவையற்றது, துரதிர்ஷ்டவசமானது. இதை அரசு செய்யவில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார் மன்மோகன் சிங்.
இதேபோல நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், சிபிஐ சோதனையை நான் ஆதரிக்கவில்லை. இது வருத்தம் தருகிறது என்றார்.










