பிஇ பகுதி நேர படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்
நெல்லை: தமிழகத்தில் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜ நகர் பொறியியல் கல்லூரி, உள்பட 9 கல்லூரிகளில் பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2013-14ம் ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. டிப்ளமோ முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர தகுதி உடையவர்கள் ஆவர்.
15.4.2013க்கு முன்பாக டிப்ளமோ முடித்து பணியில் உள்ளவர்களும், பணியில் இல்லாதவர்களும் இந்த படிப்பில சேர்த்து கொள்ளப்படுவர். இதற்கான விண்ணப்ப வினியோகம் தமிழகம் முழுவதும் நாளை தொடங்கி ஏப் 15ம் தேதி வரை நடக்கிறது.
கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, சேலம், நெல்லை அரசு பொறியியல் கல்லுரிகள், காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில் நுட்ப கழகம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, கோவை தொழில்நுட்ப நிறுவனம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பம் வேண்டுவோர் வேண்டுதல் கடிதத்துடன் The Secretary, part time B.E.,/B.Tech Admission, Coimbatore என்ற பெயருக்கு எடுக்கப்பட்ட ரூ.300 டிடியை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவினர் ரூ.150 டிடி எடுத்தால் போதுமானது. அத்துடன் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஜாதி சான்றின் நகலையும் இணைக்க வேண்டும்,. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், பகுதி நேர பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கை, கோவை தொழில்நுட்ப நிறுவனம், கோவை என்ற முகவரிக்கு ஏப் 15ம் தேதி மாலை 5 மணிககுள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.