உடல் உறுப்புகள் சோதனையில், தற்கொலைக்கு முன் இளவரசன் மது அருந்தியது நிரூபணம்
காதல் திருமணம் செய்து கொண்டதன் மூலம், தர்மபுரியில் பெரும் கலவரம் உருவாக காரணமாக இருந்த திவ்யா-இளவரசன் ஜோடி இம்மாத தொடக்கத்தில் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜூலை 5ம் தேதி, தர்மபுரியில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டார் இளவரசன்.
அவரது உடலுக்கு அருகே, சில மதுபாட்டில்கள் கிடந்தன. மேலும், அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட கடித்ததில் இருப்பது அவரது கையெழுத்துத் தான் என்பது உறுதியான நிலையில் அவரது மரணம் தற்கொலை தான் என நிரூபணமானது.
இந்நிலையில், தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை, என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா. இது குறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், நண்பர்களோடு இணைந்து மது அருந்தும் பழக்கம் இளவரசனுக்கு இருந்தது உறுதியானது.
மேலும், இளவரசனது உடல் உறுப்புக்களை ஆய்வு செய்த நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கையில் மரணமடைவதற்கு முன் இளவரசன் மது அருந்தியிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.