For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நா அப்டியே ஷாக் ஆகிட்டேன்... என் அக்கவுண்ட்ல எப்டி 5,520 லட்சம் கோடி ரூபாய் வந்துச்சு?

Google Oneindia Tamil News

நியூயார்க்: கணினியின் குளறுபடியால் சாதாரண தொழிலாளி ஒருவரின் வங்கி கணக்கில் 5 ஆயிரத்து 520 லட்சம் கோடி ரூபாய் என காட்டியதால், சம்பந்தப்பட்டவர் இன்ப அதிர்ச்சியடைந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த 56 வயது கிரிஸ் ரெனால்ட்ஸ் என்பவர் பழங்கால கார் உதிரி பாகங்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார். தனது தொழிலை மேலும், விரிவு படுத்த ஆன்லைன் பேங்கிங் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது இவரது வழக்கம்.

இதற்காக கிரிஸ் பணப் பறிமாற்ற நிறுவனமான 'பே பால்' நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளார். மாதந்தோறும் பணப் பரிவர்த்தனை அறிக்கையை அனுப்புவது பேபாலின் வழக்கம். அதுபோல், கடந்த மாத கணக்கு அறிக்கையை கிரிஸ்க்கு அனுப்பும் போது கணினியில் ஏற்பட்ட தவறால், அவரது கணக்கில் ரூபாய் 5 ஆயிரத்து 520 லட்சம் கோடி இருப்பதாக காட்டியது.

இதுவரை மாதமொன்றிற்கு 100 டாலர்களுக்கு மேல் வரவு செலவு வைத்திராத கிரிச்க்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ‘என் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதாக அறிக்கை வந்ததும், நாம் வங்கிக்கு இவ்வளவு பணம் கட்ட வேண்டுமா? என்று பயந்து விட்டேன்.

பிறகுதான் என் கணக்கில் இந்த தொகை பற்றாகி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக 'ஆன் லைன்' மூலம் என் கணக்கு விபரத்தை சரிபார்த்த போது எனது கையிருப்பு பூஜ்ஜியம் டாலராக இருந்தது' என தெரிவித்துள்ளார்.

English summary
Last Friday, Chris Reynolds checked his email inbox expecting to find his usual monthly PayPal statement. What he found was a whole lot of numbers -17 to be exact - and a balance of $92,233,720,368,547,800.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X