For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாக்டரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் பார்சலாக அனுப்பிய பெண்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு அரசு மருத்துவரைக் கொலை செய்த பெண், அவரது ஆணுறுப்பை வெட்டி கூரியர் மூலம் டாக்டரின் மனைவிக்குப் பார்சல் அனுப்பிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இந்தக் கொலையைச் செய்தது இந்தப் பெண் தான் என்று போலீஸாருக்குத் தெரியாமல் இருந்தது. பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர்தான் இக்கொலையில் ஒரு பெண்ணுக்குச் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.

கொடூர கொலையை செய்துவிட்டு தலைமறைவான அந்தப் பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கான்பூர் பயங்கரம்

கான்பூர் பயங்கரம்

கான்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் சதீஷ் சந்திரா. 42 வயதான இவர் கான்பூர் தெஹத் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ரெனியா என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார்.

ஆணுறுப்பு வெட்டப்பட்டது

ஆணுறுப்பு வெட்டப்பட்டது

கொலையான சதீஷ் சந்திராவின் ஆணுறுப்பு தனியாக துண்டித்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கொடூரக் கொலையால், கான்பூர் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியும் அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

இந்த நிலையில்தான் இக்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலையைச் செய்தது ஒரு பெண் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.

சல்வார் கமீஸ் அழகி

சல்வார் கமீஸ் அழகி

சம்பவத்தன்று இந்தப் பெண் டாக்டருடன் தென்பட்டுள்ளார். சல்வார் கமீஸ் அணிந்திருந்தாராம். மேலும் அவருக்கு வயது 20களில் இருக்கலாம் என்றும் தெரிகிறது.

கூரியரில் ஆணுறுப்பை அனுப்பினார்

கூரியரில் ஆணுறுப்பை அனுப்பினார்

கொலைக்குப் பிறகு இந்தப் பெண் அங்குள்ள கூரியர் நிறுவனத்திற்குப் போய் ஒரு பார்சலைக் கொடுத்துள்ளார். அந்தப் பார்சல் டாக்டரின் மனைவி பெயருக்கு அனுப்பப்பட்டது. டாக்டரின் மனைவி பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ஆணுறுப்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பார்சல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சோதனைக்கு உத்தரவு

சோதனைக்கு உத்தரவு

உடனடியாக இந்த ஆணுறுப்பை மருத்துவமனையில் ஒப்படைத்த போலீஸார், இது டாக்டருடையதா என்பதைப் பரிசோதிக்க கோரியுள்ளனர்.

யார் அந்தப் பெண்

யார் அந்தப் பெண்

தற்போது இந்தப் பெண் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. காதல் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
The gruesome murder of a 42-year-old government doctor in Kanpur has taken a bizarre turn with the woman accused of the crime now being suspected of having couriered the victim's severed private part to his wife, police said on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X