லாகூரில் ரம்ஜான் தொழுகையில் பங்கேற்ற லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்
பாகிஸ்தானில் படு சுதந்திரமாக ஹபீஸ் சுற்றிக் கொண்டிருப்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக இது அமைந்துள்ளது. மும்பையில் நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகத் திகழ்ந்தவர் ஹபீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்து கோரி வரும் போதிலும் அதை பாகிஸ்தான் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது. தற்போது இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் தொடர் தாக்குல் நடத்திய நிலையில், ஹபீஸ் இன்று லாகூரில் நடந்த தொழுகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடந்த தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோருடன் ஹபீஸும் பங்கேற்றார்.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைத் அமெரிக்கா தடை செய்ததைத் தொடர்ந்து ஜமாத் உத் தவா என்ற பெயரில் புதிய பெயரில் இயங்கி வருகிறார் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது.