For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆகஸ்ட் 15ம் தேதி பெட்ரோல் விலை ரூ. 2.50 ரூபாய் குறையலாம்!
டெல்லி: நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி பெட்ரோல் விலையை சற்றுக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சுதந்திர தின விழாவினைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைக்க முடிவு செய்துள்ளன. அதேசமயம், ரூபாயின் மதிப்பு குறையும் பட்சத்தில் இதன் விலை 3 ரூபாய் அளவு வரை கூட குறையலாம்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையானது சராசரியாக 7.5 டாலராக இருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த மாதத்தில் இது இரண்டாவது விலை குறைப்பாகும். பெட்ரோல் நிறுவனங்கள் கடந்த 1 ஆம் தேதி அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 1.09 குறைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 72.51 ஆக உள்ளது.
Comments
English summary
Petrol prices are likely to fall to the lowest in one year on Independence day as state oil firms are planning to cut the fuel's rate by Rs 2.50 per litre, the biggest fall in many months, government and industry sources said.
Story first published: Tuesday, August 12, 2014, 17:21 [IST]