For Daily Alerts
Just In
தேர்தல் முடிவு எதிரொலி: டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 95 பைசா உயர்ந்தது!!
மும்பை: தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர ஆரம்பித்துள்ளது.
இன்றைய காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 95 பைசா உயர்ந்தது.
கடந்த பத்து மாதங்களாக 59.29 ரூபாயாகத் தொடர்ந்த மதிப்பு, இன்றுதான் முதல்முறையாக ரூ 58.72 ஆனது.
பங்குச் சந்தை உயர்வு, மத்தியில் ஆட்சி மாற்றம், இனி நாட்டுக்குள் வரும் அந்நியச் செலாவணி போன்றவற்றை வைத்து, வரும் மாதங்களில் ரூபாய் மதிப்பு ரூ 57 வரை உயர வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Extending its rising streak, the rupee appreciated by 95 paise at the morning to trade at fresh high of 58.72 against the dollar in trade today on foreign capital inflows on expectations of stable government at the Centre.
Story first published: Friday, May 16, 2014, 12:34 [IST]