For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதிமுதலீட்டுக்கான புதிய செல்போன் அப்ளிகேஷன் போட்டி-செபி அறிவிப்பு

Google Oneindia Tamil News

SEBI announces new competition for cell phone application…
டெல்லி: நிதி ஆலோசனைகள், முதலீடுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செல்ஃபோன் அப்ளிகேஷன் உருவாக்கும் மாணவர்களுக்கு 3 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பங்குச்சந்தை வழிகாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என்றும் செபி அறிவித்துள்ளது.

பல்வேறு வகையான நிதி முதலீடுகள் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த அப்ளிகேஷன் இருக்க வேண்டும் .மேலும்,ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இணையதள இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தக்கூடிய இந்த அப்ளிகேஷனை தயாரிக்கவேண்டும்.

முழுமையான மென்பொருள் வடிவமைப்புடன் கூடிய அப்ளிகேஷன்களை செபியின் மும்பை அலுவலகத்துக்கு கடைசி தேதியான மே 15க்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நிதி நிர்வாக நிபுணர்கள் குழு அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆராய்ந்து பரிசுக்குரிய அப்ளிகேஷனை தேர்வு செய்யும். முதல் பரிசாக 3 லட்ச ரூபாயும், அடுத்தடுத்த நிலையில் உள்ள அப்ளிகேஷன்களுக்கு 2வது பரிசாக 2 லட்ச ரூபாய் மற்றும் 3ம் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்றும் செபி அறிவித்துள்ளது.

English summary
SEBI has announced a competition for financial investment mobile application development. First prize for this competition winner is Rs 3 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X