புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்
-ஜெய்ப்பூர்- மதுரை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில்
-நாடு முழுவதும் 54 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப்படும்
-புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்
-பெங்களூரில் புறநகர் ரயில் சேவை அறிமுகப்படுத்த ஆய்வு
-தமிழகம் உட்பட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எம்.பி.க்கள் அமளி
-எம்.பி.க்களின் கடும் அமளிகளுக்கு இடையே சதானந்தா கவுடா தொடர்ந்து பட்ஜெட் தாக்கல்
-நரேந்திர மோடியின் குஜராத், சதானந்த கவுடாவின் கர்நாடகாவை முன்வைத்தே ஏராளமான ரயில் சேவைகள் அறிவிப்பு
-சென்னை- ஹைதராபாத்; சென்னை- மைசூர் இடையே அதிகவேக ரயில்கள்
-மும்பையில் 64 புதிய மின் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
-வட கிழக்கு மாநில ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 5,000 கோடி
-அடுத்த 5 ஆண்டுகளில் காகிதமே அல்லாத ரயில்வே அலுவலகங்கள்
-நாட்டின் துறைமுகங்களை ரயில்கள் மூலம் இணைக்க முன்னுரிமை
-ரயில் பயணிகளை 'எழுப்ப' எஸ்எம்எஸ் சேவை
-ரயில்கள் மூலம் பால் எடுத்துச் செல்ல 'பால் டேங்கர்கள்' விரைவில் அறிமுகம்
-10 ரயில் நிலையங்களை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த நடவடிக்கை
-மெட்ரோ நகரங்களிடையேயான ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரூ100 கோடி ஒதுக்கீடு
-ஆன்லைன் ரிசர்வேஷன் வேகப்படுத்தப்படும்.
-ஒரே நேரத்தில் 1.2 லட்சம் பேர் இந்த இணையத்தளத்தில் டிக்கெட் வாங்கலாம்
-நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வினியோகிகப்படும்
-குறிப்பிட்ட ரயில்களின் ஏசி, முதல் வகுப்பு பெட்டிகளில் வை-பை வசதி அறிமுகம்
-குறிப்பிட்ட ரயில்களிலும் இந்த வை-பை வசதி அறிமுகமாகும்