For Daily Alerts
Just In
மோடி சர்க்காரின் 100 நாட்கள்.. சாதனைகள் என்ன?
டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து 100 நாட்களாகிவிட்டது.. மோடி சர்க்கார் பதவியேற்பு விழாவுக்கு முதல் முறையாக சார்க் தலைவர்களை அழைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மோடி தலைமையிலான 100 நாள் அரசின் 'பேசப்படும் சாதனைகள்' இவை:
- பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்து வெளியுறவுக் கொள்கையில் புதிய திருப்பம் ஏற்படுத்தியது.
- கருப்புப் பணத்தை மீட்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை உருவாக்கியது.
- இருதரப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக பூடானுக்கு தனது முதலாவது பயணத்தை மோடி மேற்கொண்டார்.
- 100 நாட்களுக்குள் தங்களது இலக்கு என்ன என்பதை வரையறுத்து செயல்பட அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியது.
- கோவாவில் இந்தியாவின் மிகப் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யாவை பார்வையிட்டு கடற்படையினர் மத்தியில் உரையாற்றியது.
- ஓய்வூதியத் திட்டத்துக்காக ரூ1,000 கோடி ஒதுக்கீடு
- நர்மதா அணைக்கட்டின் நீர் தேக்கும் அளவை உயர்த்த அனுமதித்தது.
- அரசு மருத்துவமனைகளில் இலவசமாக எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன் வழங்க முடிவு செய்தது.
- பொருளாதார வளர்ச்சி 5.7% ஆக உயர்ந்தது.
- பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டை 49% ஆக உயர்த்தியது.
- அமைச்சர்களின் உறவினர்களை ஊழியர்களாக நியமிக்கக் கூடாது.
- கங்கை நதி தூய்மைக்காக ரூ2037 கோடி ஒதுக்கீடு.
English summary
As the Narendra Modi government completed over 100 days in power, there has been a stark difference in the functioning of the NDA and UPA governments.
Story first published: Tuesday, September 2, 2014, 17:25 [IST]