பயணிகளை அலர்ட் செய்ய எஸ்.எம்.எஸ். வசதி
-ரயில்கள் சென்று கொண்டிருக்கும் இடத்தை ஆன்லைனில் நேரடியாக அறிய வசதி
-பயணிகளை அலர்ட் செய்ய எஸ்.எம்.எஸ். வசதி
-குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்படும்
-ரயிலில் செல்லும் அனைத்து காவலர்களுக்கும் செல்போன்கள் வழங்கப்படும்
-பெண்கள் பெட்டிகளில் பெண் காவலர்கள் பயணிப்பர்
-நாடு முழுவதும் ரயில்வே பாலங்கள் அமைக்க ரூ. 1785 கோடி ஒதுக்கீடு
-9 பிராந்தியங்களில் ரயில்களின் வேகத்தை 1 மணி நேரத்துக்கு 160 கி.மீ-ல் இருந்து 200 கி.மீ. அதிகரிக்க நடவடிக்கை
- ரயிலில் உணவை எஸ்எம்எஸ் மூலமே ஆர்டர் செய்யலாம்
-ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் செய்ய ஐவிஆர்எஸ் போன் லைன்கள் உருவாக்கப்படும்
- இந்த வகுப்புகளில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்படும்
-ஏசி, முதல் வகுப்பு படுக்கைகள், தலையணை உறைகளை துவைக்க இயந்திர லாண்டரிகள்
-நாட்டின் அனைத்து முக்கிய நகர்களையும் இணைக்கும் வைர நாற்கர திட்டம் அமலாக்கப்படும்
-இந்த வைர நாற்கர கட்டமைப்பில் புல்லட் ரயிலும் இணைக்கப்படும்
-இதற்கான திட்டம் குறித்து ஆராய ரூ. 100 கோடி ஒதுக்கீடு
-இதில் சென்னை, ஹைதராபாத், மும்பை நகர்கள் அடங்கும்
-வைரநாற்கர ரயில்வே திட்டத்துக்கு ரூ9 லட்சம் கோடி தேவை- சதானந்த கவுடா
-முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், ப்ளாட்பார்ம் டிக்கெட்டுகள், பார்க்கிங் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் பெறலாம்
-மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்படும்
-ரயில்வே பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்
-இந்தப் பல்கலையில் தொழில்நுட்ப, தொழில்நுட்பம் அல்லாத ரயில்வே படிப்புகள் போதிக்கப்படும்
-ரயில்வே ஊழியர்களும் பயிற்சிக்காக அனுப்பப்படுவர்
-ரயில்வே முன்பதிவு நடைமுறைகள் சீரமைக்கப்படும்- மொபைல் மூலம் முன்பதிவுக்கு நடவடிக்கை
-ரயில் நிலையங்களில் தானியங்கி ரயில் டிக்கெட் இயந்திரங்கள் அமைக்கப்படும்
-நாடு முழுவதும் ஆன்மீக தலங்களை ஒருங்கிணைத்து புதிய ரயில்கள்
-ரயில்கள், ரயில் நிலையங்கள் சுகாதாரத்துக்கான நிதி 40% அதிகரிக்கப்படும்