For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் மழை... சிம்லா அருகே பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 21 பேர் பலி

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா அருகே பெருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள்.

சிம்லாவிலிருந்து சவேரா கட் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த, பேருந்து ஒன்று பசந்த்பூர் பகுதியில் உள்ள காதர் கட் எனும் இடம் அருகே 400 மீ ஆழத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், மீட்புப் படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனபோதும், இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.டபிள்யூ. நெகி கூறியுள்ளார்.

விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதுவே பேருந்து விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
A Himachal state roadways bus rolled down a hill and fell into a gorge on Tuesday resulting in death of 21 onboard passengers in Himachal Pradesh's Shimla district, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X