ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்க காரணமாண 'அந்த 4 பாயிண்ட்கள்'
பெங்களூர்: ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிக்க 4 முக்கிய விஷயங்கள் உள்ளன.
ஜெயலலிதா மீது 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிமன்றம் அவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
அப்படி நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்க 4 முக்கிய காரணங்கள் உள்ளன.
ரூ.53 கோடி
ஜெயலலிதா கணக்கில் வராத ரூ. 53 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை வாங்கியதை அரசு தரப்பு நிரூபித்தது.
சொத்து
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சொத்துக்களை பெற கிரிமினல் சதி செய்ததாக நிரூபிக்கப்பட்டது.
பணம்
ஜெயலலிதாவின் வங்கி கணக்குகளில் அவரது வருமானத்தை விட அதிக அளவில் பணம் இருந்தது நிரூபிக்கப்பட்டது.
சட்டவிரோதம்
சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்க ஒரு வங்கி கணக்கில் இருந்து மறு கணக்கிற்கு அடிக்கடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதும் நிரூபிக்கப்பட்டது.